Thursday, 16 April 2026

திறன் மேம்பாட்டு நிதி திரும்ப செலுத்தாதவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படும்.

Kuala Lumpur,January 8

2000-த்தாம் ஆண்டு தொடங்கி  PERBADANAN TABUNG KEMAHIRAN  கடனுதவி பெற்ற இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னமும் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளதாக மனிதவள அமைச்சர்  DATUK SERI RAMANAN RAMAKRISHAN  தெரிவித்தார்.

2004 திறன் மேம்பாட்டு நிதி சட்டத்துக்கு உட்பட்டு, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தத் தவறும் தரப்பினருக்கு எதிராக சட்டம் 640 செயலாக்கத்தை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.

பொது நிதிகளை நிர்வகிப்பதில் நியாயத்தை உறுதி செய்வதோடு, 

தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ள கடன் பெற்றுள்ளவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கையாகவும் இது விளங்குகிறது.admin:sabthamstv.